நன்றி:சசிகலா - தென்றல் (இணைய பக்கம்)
http://veesuthendral.blogspot.in/2012/04/blog-post_13.html
கரகாட்டம் ...
தலைமேல் செம்பு சூடி
கை கொண்டு ஏந்தாமல்
உடலை வில்லாய் வளைத்து
ஆடுகின்ற கரகாட்டம்
ஆரம்ப நாட்களில்
ஆண்களின் ஆட்டக்கரகமாய்
துளிர்விட்டு பின்னாளில்
மங்கையரின் ஆட்டமாகி
இது வரை அழிவின்றி
வாழுகின்ற தமிழ்க்கலையாய்...
மயிலாட்டம் ...
மயில் போன்ற முகமூடி
இடுப்பினிலே தோகைகள்
வான்பார்த்து சிலிர்த்தெழுந்து
தோகை மயிலாடுதல் போல்
உச்சி முதல் பாதம் வரை
இரைதேடி ஓடுதல் போல்
அசைக்கின்ற பொழுதினிலே
அழகுமயில் நேரினிலே
ஆடுதல் போல் கம்பீரம் ...
காவடி ஆட்டம் ...
அரைவட்ட வில்லாக வளைத்தெடுத்து
நடுவிலொரு கம்புகட்டி
காவடியை அலங்கரித்து
கவிபாடி ஆடுகின்ற
காவடி ஆட்டமதை
முருகனின் ஆட்டமென்ற
முன்னுரையோடு ஆடிடுவர்
ஆனாலும்
வழிபாட்டு ஆட்டம் தனி
கலை ஆட்டம் ஆறு பாகம் ...
பொய்க்காலாட்டம் ...
கொக்கலி ஆட்டமென்ற
உயரக்கால் ஆட்டத்தில்
பொய் கால்களைப் பூட்டி
கொக்கின் கால் போல்
நீண்ட கட்டையோடு
ஆறடி உயரம் வரை
ஆகாயத்தில் நின்றாடும்
ஆட்டமிது தமிழன் கலை ...
தெருக்கூத்து ....
திருக்கூத்து என்ற கலை
காலத்தின் பிடியில் சிக்கி
தெருக்கூத்தாய் நிற்கிறது
கலைஞ்ரின் வாழ்வாதாரம் போல்
ஆடல் நாயகன் சிவபெருமான்
தில்லையில் ஆடியத் தெருக்கூத்து
பார்த்தாடியதால் பரவசமாய்
பாரதக் கூத்தென்ற கதை
சொல்லும் திரு - தெருக்கூத்து ...
thanks a lot. u have helped me for a tamil project!
பதிலளிநீக்குthanks a lot. u have helped me for a tamil project!
பதிலளிநீக்குஉங்கள் சீறிய முயற்சிக்கு எங்களின் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு