முன்னொரு காலத்தில் வீரநாராயண பெருமாள்புரம் என்றழைக்கப்பட்டமுதலாம் பராந்தக மன்னனால் உருவாக்கப்பட்ட காட்டுமன்னார்குடி கடலூர் மாவட்டத்தின் ஏழு வட்டங்களுள் ஒன்று. இதை தலை நகராக கொண்டு 161 கிராமங்கள் இயங்கி வருகின்றன. வைணவ மக்கள் பெரிதும் மதிக்கும் நாதமுனிகள் அவதரித்த தளம் இது. அதுமட்டுமில்லாது திரு ஆளவந்தார் அவதரித்த தளமும் இதுவாகும். சைவ திருமுறை பாடிய திருமூலர் அவதரித்த தளமும் இதுவேயாகும். கல்வெட்டுகளில் வீரநாராயண சதுர்வேத மங்கலம் என குறிப்பிட பட்டிருக்கிறது. பின்னாளில் சாதிய சிந்தனைகளை உடைத்து தூர எறிந்த மாபெரும் தலைவர் சகஜானந்தர் அவதரித்த தளமும் இதுவாகும். தலித் தலைவர் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு குழுவின் முதல் தலைவர் எல் இளையபெருமாள் அவர்களும், சாதிய பிரச்சினைகள் இருப்பினும் அணுகுமுறையால் சிறப்பாக மற்றவர்களிடம் பழகிய எம் ஆர் கே அவர்களும் இங்கே பிறந்து மக்களுக்கு தொண்டாற்றியிருக்கிறார்கள்.காலபோக்கில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகு பல மாறுபாடுகளை பெற்று திகழும் இந்த நகரத்திற்கு சுதந்திர போராட்ட காலத்தில் பல தலைவர்கள் வந்து மக்களிடையே உரைவீச்சாற்றியிருப்பதை பல பக்கங்கள் நினைவுபடுத்துகின்றன. இசுலாமிய மக்களும் கிருத்துவ மக்களும் இந்து பிரிவினர்களும் சிறு சிறு தொய்வுகளையும் தாண்டி ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். சிதம்பரத்தில் இருந்து 26 கி.மீ. தூரத்தில், கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து 13 கி.மீ தூரத்திலும் நடுவே அமைந்துள்ளது. இதுமட்டுமில்லாமல் இது ஒரு சட்டமன்ற (தனி) தொகுதியாகவும் செயல்பட்டு வருகின்றது. இதன் வடக்குப்புறத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி உள்ளது. காட்டுமன்னார்குடியின் கட்டுபாட்டில் உள்ள கிராமங்கள்.
- ஆனந்தகுடி
- கொக்கரசன்பேட்டை
- மதகளிர்மாணிக்கம்
- ஸ்ரீசாத்தமங்கலம்
- குணமங்கலம்
- மேல்புளியங்குடி
- கள்ளிப்பாடி
- அய்யன்கீழ்புளியங்குடி
- கீழ்புளியங்புடி
- ஸ்ரீபுத்தூர்
- நகரப்பாடி
- ஸ்ரீவக்கரமாரி
- ஸ்ரீமுஷ்ணம்
- தொராங்குப்பம்
- ஸ்ரீஆதிவராகநல்லூர்
- தேத்தம்பட்டு
- கொழை
- சாத்தவட்டம்
- ஸ்ரீநெடுஞ்சேரி
- கூடலையாத்தூர்
- கானூர்
- வளச்காடு
- குறிஞ்சிக்குடி
- பேருர்
- காவல்குடி
- முடிகண்டநல்லூர்
- மழவராயநல்லூர்
- குமாரக்குடி
- கோதண்டவிளாகம்
- நங்குடி
- நந்தீஸ்வரமங்கலம்
- வட்டத்தூர்
- புடையூர்
- சோழட்டிரம்
- பாளையம்கோட்டை (கீழ்பாதி)
- வடக்குப்பாளையம்
- பாளையம்கோட்டை (மேல்பாதி)
- இராமாபுரம்
- கொண்டசமுத்திரம்
- மாமங்கலம்
- அகரப்புத்தூர்
- வானமாதேவி
- சுத்தமல்லி
- திருசின்னபுரம்
- கொல்லிமலை மேல்பாதி
- நாட்டார்மங்கலம்
- கருணாகரநல்லூர்
- பழஞ்சநல்லூர்
- வீராணநல்லூர்
- உடையார்குடி
- மன்னார்குளக்குடி
- வடக்கு குளக்குடி
- லால்பேட்டை
- எள்ளேரி( கி )
- எள்ளேரி(மே)
- கொல்லிமலை கீழ்பாதி
- மாணிய ஆடுர்
- நத்தமலை
- ராயநல்லூர்
- கந்தகுமாரன்
- கலியமலை
- பூரத்தான்குடி
- உத்தமசோழகன்
- டி.புத்தூர்
- கொத்தங்குடி
- லட்சுமிகுடி
- செட்டிக்கட்டளை
- ஆள்கொண்டநத்தம்
- சிவக்கம்
- ராதாநல்லூர்
- கொத்தவாசல்
- மேலநெடும்பூர்
- களிகடந்தான்
- நெய்வாசல்
- தொரக்குழி
- சோழக்கூர்
- வளத்துர்திருபணியபுரம்
- மேல்வன்னியுர்
- ஒப்ளாஞ்சிமேடு
- கீழ்நெடும்பூர்
- பரவிளாகம்
- வடமூர்
- கூடுவெளி
- தெம்மூர்
- மெய்யாத்தூர்
- கீழ்வன்னியூர்
- வானாதராயன் பேட்டை
- வீரநத்தம்
- சுறாவிழுந்தூர்
- கீழ்அதமாங்குடி
- வெளவால்தோப்பு
- புள்ளையாந்தாங்கல்
- நடுத்திட்டு
- திருநாரையூர்
- சர்வராஜன் பேட்டை
- இடையார்
- குப்பபிள்ளைசாவடி
- திருமூலஸ்தானம்
- கோவில்பத்து
- கீழராதாமூர்
- மேல்ராதாமூர்
- ராஜேந்திர சோழகன்
- மன்னார்குடி
- குருங்குடி
- குப்பங்குழிபூவிழந்தூர்
- பெரியகோட்டகம்
- கீழ்கடம்பூர்
- செட்டித்தாங்கல்
- வீராநந்தபுரம்
- மேல்கடம்பூர்
- வேளாம்பூண்டி
- தொரப்பு
- ஷண்டன்
- பலவாய்கிண்டன்
- ஈச்சம்பூண்டி
- சிறுகாட்டூர்
- கஞ்சாங்கொல்லை
- ஆச்சாபுரம்
- எய்யலூர்
- அருமுழிதேவன் (டி)
- கீழ்புளியம்பட்டு
- ரெட்டியூர்
- ஆதனூர் (மன்னார்குடி)
- குணவாசல்
- மேல்பக்கத்துறை
- ஆயங்குடி
- குச்சூர்
- உமாம்புலியூர்
- முட்டம்
- மோவூர்
- அழிஞ்சிமங்கலம்
- கானாட்டாம்புலியூர்
- குஞ்சிமேடு
- கருப்பேரி
- வீரசோழபுரம்
- ஆழங்காத்தான்
- தொண்டமாநத்தம்
- ஓடையூர் (மன்னார்குடி)
- மாதர்சூடாமணி
- கூத்தூர்
- புலியங்குடி (மன்னார்குடி)
- மன்னார்குடி (அரசூர்)
- வெட்சியூர்
- வெண்ணையூர்
- கொமராட்சி
- கீழ்கரை
- நந்திமங்கலம்
- அத்திப்பட்டு
- தெற்குமாங்குடி
- வடக்குமாங்குடி
- கருப்பூர்
- நளம்புத்தூர்
- முள்ளங்குடி
- கீழ்பருத்திகுடி
- காஞ்சிவாய்
- மேல்பருத்திகுடி
- இளங்கம்பூர்
- வெள்ளுர்
- சிதம்பர அரசூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக