மேடை நாடகமே தம் வாழ்வின் பெரும்பணி என்று செயல்பட்டவர்
அவ்வை தி.க. சண்முகம். அவர், மேடை நாடகங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்
எனக் கூறுகிறார்.
“தமிழ் நாடகங்களைப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். புராண நாடகம்,
பக்தி இலக்கிய நாடகம், வரலாற்று நாடகம், கற்பனை நாடகம், பக்தி இலக்கிய நாடகம்,
சமுதாய நாடகம், சமுதாயச் சீர்திருத்த நாடகம், தேசிய நாடகம், நகைச்சுவை நாடகம்
என நாடகங்களை இவ்வாறு பலவகைப்படுத்திப் பார்க்க வேண்டும். இந்த நாடகங்களோடு
பிரச்சார நாடகம் என்னும் ஒரு பிரிவையும் சேர்த்துக் கொள்ளலாம்” என்று கூறுகிறார்.
1. புராண நாடகம்
சிவலீலா, கிருஷ்ணலீலா, சக்திலீலா, மகாபாரதம் போன்றவை புராண
இதிகாச நாடகங்கள்.
2. வரலாற்று நாடகம்
இராஜராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன், தஞ்சை நாயக்கர் தாழ்வு,
இமயத்தில் நாம் போன்றவை வரலாற்று
நாடகங்கள்.
3. கற்பனை நாடகம்
இரண்டு நண்பர்கள், லீலாவதி, சுலோசனா, வேதாள உலகம் போன்றவை
கற்பனை நாடகங்கள்.
4. பக்தி நாடகம்
நந்தனார், சிறுத்தொண்டர், பிரகலாதன்,
மார்க்கண்டேயர் போன்றவை பக்தி நாடகங்கள்.
5. சமுதாய நாடகம்
உயிரோவியம், வேலைக்காரி, நாலுவேலி நிலம்,
டம்பாச்சாரி விலாசம் போன்றவை சமுதாய நாடகங்கள்.
6. சீர்திருத்த நாடகம்
அந்தமான் கைதி, இரத்தக் கண்ணீர், இழந்த காதல், வாழ்வில் இன்பம்
போன்றவை சமுதாயச் சீர்திருத்த நாடகங்கள்.
7. நகைச்சுவை நாடகம்
சபாபதி, பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், துப்பறியும் சாம்பு, ஒரு சொந்த
வீடு வாடகை வீடாகிறது போன்றவை நகைச்சுவை நாடகங்கள்.
8. பிரச்சார நாடகம்
பதிபக்தி, ஐம்பதும் அறுபதும், விலங்கு மனிதன், காகிதப் பூ
போன்றவை பிரசார நாடகங்கள்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக