ஞாயிறு, 10 நவம்பர், 2013

புலம் பெயர்ந்த தமிழர் மாநாடு

 
                                            புலம் பெயர்ந்த தமிழர் மாநாடு கடந்த 8,9,10,தேதிகளில் மொரிசியஸ் தலைநகரில் நடந்தது. இதில் 40 க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் இருந்து புலம் பெயர் தமிழர்கள் கலந்து கொண்டனர்.


                                           குறிப்பாக மலேஷியா, தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கும் தமிழர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டில், இனபடுகொலை செய்த இலங்கை அரசை கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

                                          மேலும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழர்கள் தமிழையும் தமிழர்களையும் முன்னேற்ற தகுந்த நடவடிக்கை எடுப்பதில் முனைப்புக் காட்டவேண்டும் என்றும், உலக தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையோடு இணைந்து செயல் பட வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்ட்டன.

                                           தமிழின் தொன்மத்தை உலகம் போற்ற உயர்த்திய மறைநூல் கண்ட தமிழன் திருவள்ளுவனை சிறப்பிக்க ஒரு தினம் உலக தமிழர்களால்  உருவாக்கப்படவேண்டும் என்றும் திட்டங்கள் முன்வைக்கபடட்டன.

                                         இனிவரும் காலங்களில் உலகில் தமிழினம் தன் தலை முறையையும் கலாசாரத்தையும் பண்பாட்டையும் காக்க வேண்டுமென்றால் தமிழர்கள் அனைவரும் இணைந்து ஒரு முடிவெடுக்க வேண்டியது அவசியம்.

                                        மொரிஷியசில் நடந்த மாநாட்டின் காணொளி காண இங்கே சொடுக்கவும்.   http://www.youtube.com/watch?v=JmJ-jZsAI8o

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக