வெள்ளி, 29 நவம்பர், 2013

மஞ்சளும் இஞ்சிகொத்தும்


தமிழர்களின் பாரமபரியங்களில் திருவிழாக்கள் முதலிடம் வகிக்கின்றது. அந்த திருவிழாக்களும் தமிழர்களின் கலாசாரங்களையும் வாழ்க்கை முறைகளையும் உலக மக்களுக்கு ஒவ்வொரு நாளும் பறைசாற்றி கொண்டேயிருக்கும் படியாகத்தான் திகழ்கின்றது.

தங்களுடைய தனித்திறன் வாய்ந்த நாகரிகத்தாலும் பண்பாட்டாலும் மொழியாலும் தமிழன் தமிழ் மொழியின் சிறப்பை உலகறிய செய்ய முயன்று வரும் வேளையில், தமிழனின் தலையாய திருவிழாவான பொங்கல் திருவிழாவின் போது தமிழன் தன்னுடைய மூதாதை கலாச்சாரமான மண் பானையில் இருந்து பித்தளை சில்வர் நோக்கி பயணிப்பதை கண்டு வேதனை கொள்வதை தவிர வேறென்ன செய்ய முடியும் என்று இருந்துவிடாமல், தமிழர்கள் உலக கலாச்சாரங்களை பின்னுக்கு தள்ளும் உயர்ந்த நாகரிகம் கொண்ட தமிழ் நாகரிக முறைமைகளை மீண்டும் செயல்படுத்த முயல வேண்டும்.

மஞ்சளும் இஞ்சிகொத்தும் கட்டி குடும்பத்தோடு பொங்கல் வைத்து மிகிழ்ந்த தமிழன் மண்பானையை மறந்து வருவதை வெளிச்சம் போட்டு காட்டும் காணொளி இது. இதை பகிரும் போதே கடந்த காலம் ஒருமுறை நம் கண் முன்னே வந்து விட்டு செல்கின்றது.

காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்
http://www.youtube.com/watch?v=whJSCAOTHPo

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக