நம்முடைய திருவிழாக்களில் நாம் பார்த்து மகிழும் நாட்டுப் புறக் கலைகள் நமது முன்னோர்கள் நமக்கு தந்துவிட்டு சென்ற மிகப் பெரிய கொடை செல்வங்கள்.
நம்முடைய கவலைகளை நாம் மறந்திருக்கவும் நம்முடைய இளம் தலைமுறையை நாம் சரியான முறையில் வழிநடத்தவும் நம்முடைய வீரதீர செயல்களை அடுத்த தலைமுறைக்கு நினைவுபடுத்தவும் நமக்கு கிராமிய கலைகளான தெருகூத்தும் நாடகங்களும்தான் பெரும்பாலும் கைகொடுத்தன. சுதந்திர போராட்டக் காலங்களில் இதுபோன்ற கலைகள் மூலமாகட நாம் எளிதில் மக்களிடம் நம்முடைய உணர்வுகளை கொண்டு சேர்க்க முடிந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் கண்முன்னே விரிந்து கிடந்த அந்த கலைகள் விவசாயத்தைப் போலவே விலகிப் போவதை நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த கலைகள் நமக்கானவை, நம் சந்ததிகளுக்கானவை, அதை மீட்டெடுக்க வேண்டியது நம்முடைய கடமை.
திரை உலகமும், சின்னத்திரை நாடகங்களும் ஆக்கிரமித்துக் கொண்ட மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்றால் நிச்சயமாய் நாம் நம்முடைய பாரம்பரிய கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க பழகிக்கொள்ள வேண்டும்.
நாட்டுபுற பாடல்கள், வில்லுப்பாட்டு, பறையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகம், காவடி, தெருக்கூத்து, நாடகம், சிலம்பம், குத்து, தப்பு, புலியாட்டம் போன்ற நம்முடைய பாரம்பரிய விளையாட்டுகளையும் பாடல்களையும் அருகிருந்து பார்க்கவும், பாதுகாக்கவும் நாம்தான் முயற்சிக்க வேண்டும்.
ஆகவே இசையோடும் பழம்பெரும் கலைகளோடும் இணைந்து இன்புற்றிருக்க உங்களுக்கு தோன்றினால் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
அவ்வைக் கலைக்கூடம்,
காட்டுமன்னார்கோயில்,
தொலைபேசி: 8220818381, 9840277737, 9962543148.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக